இரவின் நிலவு இட்டுச் சென்ற அழகிய மருதாணி தானோ - அதிகாலை வானின் இளஞ்சிவப்பு !
எங்கும் பரவிக் கிடக்கும் மருதாணியின் இளஞ்சிவப்பை ஓர் விரல் கொண்டு துடைத்து, நெற்றித் திலகமாய் இட்டுக் கொண்டது கீழ்வானம்.
திலகத்தின் வழியே எட்டிப் பார்த்துச் சிரித்தான் மழலைக் கதிரவன்.
No comments:
Post a Comment