காற்றின் ஈரம் பருகி
தாகம் தணிக்க
இதழ் அவிழ்த்தது
நறும் முகை.
தீரா தாகம்
தணிந்த நிறைவில்
காற்றெங்கும்
தன்மணம் நல்கியது
காணிக்கையாய்.
காணிக்கை யாருக்கு?
நாடோடியாய் திரியும்
காற்றுக்கா?
எங்கோ தொலைத்(ந்)து
வேறு எங்கெங்கோ தேடியலையும்
மனிதனுக்கா?
தேனுக்காக அலையும்
வண்டுக்கா?
வண்டின் அணுக்கத்தில்
தானே அறியா
தாகம் தீர்க்கவா?
No comments:
Post a Comment